23/04/2026
ஒரு 🐕🦺தெரு நாயின் தெரு பயணம்…
உலகம் பார்க்கும் வெற்றியாக மாறியது எவ்வாறு..??👇
ஒவ்வொருவருக்கும் ஒரு நேரம் உண்டு ,
தாமதம் தான், ஆனால் தோல்வி இல்லை என்பதை பறைசாற்றும் நாயின் கதை.
இன்று நம்முடைய கதாநாயகன்
வெள்ளை மற்றும் பழுப்பு நிறம் கலந்த ஒரு நாய்.
நெற்றியில் வெள்ளை நிறத்திலான இதய வடிவம் பொருந்தியவர்.🐕🦺
இது 2022 டிசம்பர் வரை மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரின் தெருக்களில் அலைந்துக்கொண்டிருந்தது. இதற்கும் உணவு கொடுத்தவர்களும் இருந்திருக்கலாம்,அதே நேரத்தில் விரட்டியவர்களும் இருந்திருக்கலாம். ஆனால் அதன் வாழ்க்கை அதனுடன் நின்று விடவில்லை !
அந்த தருணத்தில் , இந்தியா முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்ட வியட்நாம் வம்சாவளியைக் கொண்ட அமெரிக்க பௌத்த தேரர்கள் குழுவை சந்திக்கிறது இந்த தெரு நாய்!
ஏதோ ஒரு காரணத்தால், அந்த குழுவை பின்தொடர இது தீர்மானித்தது .அதன் பிறகு, பயணம் முடியும் வரை எத்தனை தடைகள் வந்தாலும், அவற்றை தாண்டி இந்த நாய் அவர்களுடன் பயணம் செய்தது!
சில சமயம் உடல்நலக்குறைவு, சில சமயம் விபத்து,எனினும் அது தனது பயணத்தை கைவிடவில்லை.
இதைப் பார்த்த அந்த தேரர்கள் குழு, அந்த நாயை தத்தெடுக்க தீர்மானிக்கின்றனர். அதற்கு அவர்கள் வைத்த பெயர் “ஆலோகா”. “ஆலோகா” என்பது ஒளி, பிரகாசம், தெளிவு, மகத்துவம் போன்ற அர்த்தங்களை கொண்ட ஒரு சமஸ்கிருத சொல்.
பின்னர் ஆலோகா, அந்த தேரர்கள் குழுவினருடன் அமெரிக்கா செல்கிறது.
“Walk for Peace” என்ற அமைதிப் பயணத்தின் மூலம் 2300 தூரம் பயணித்து உலகம் முழுவதும் ஆலோகா பிரபலமானது.
பௌத்த தேரர்கள் குழு, அக்டோபர் 28 முதல் பெப்ரவரி 10 வரை 108 நாட்களில் அமெரிக்கா முழுவதும் 2300 கிலோமீட்டர் நடைபயணம் செய்தனர். அதில் ஆலோகாவும் இணைந்தது.
இன்று இலங்கையில் ஆரம்பமாகும் “Walk for Peace” நடைபயணத்திலும் ஆலோகா கலந்து கொள்கிறது.
அதற்காக அது அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு வருகைத்தந்துள்ளது.
நம்முடைய வாழ்க்கையும் இது போன்றதே.
நாம் எங்கிருந்து ஆரம்பித்தோம் என்பது முக்கியமில்லை!நாம் எங்கே செல்லப் போகிறோம் என்பதுதான் முக்கியம். சரியான பாதையில் தடைகளை தகர்த்து,நின்றுவிடாமல் சென்றால், நாமும் வாழ்வில் வெற்றிப் பெற முடியும்😘🙏