07/07/2024
ரூப் வலுவாக இருக்கட்டும் என்று கம்பியை அதிகமாக போடுகிறீர்களா?
ரூப் கம்பி கட்டுதலில் மிகவும் ஆபத்தான தவறு என்ன?
வீடு கட்டுபவர்கள் லின் கணிப்பு இதுவே:
1. நல்ல பெரிய கம்பியை போட்டு 12mm, 10mm, அதிக இடைவெளி இல்லாமல் கம்பி கட்டவேண்டும்.
கம்பியின் இடைவெளியை குறைத்து தடிமனான கம்பியை போட்டு கட்டினால் ரூப் வலுவாக இருக்கும் என்பது முற்றிலும் தவறு மற்றும் ஆபத்தானது.
இந்திய தர ஆணையம்(Indian Standards) இது குறித்து சொல்வது என்ன.
நாம் ரூப் ஓட்டுவது RCC வைத்து தான். அதாவது reinforced cement concrete(கம்பியுடன் மற்றும் கான்கிரீட்). இதில் இரண்டு பொருட்கள் இணைகின்றன.
கான்கிரீட் என்பது ப்ரீ டில்(Brittle) தன்மை கொண்டது.
அதாவது பிஸ்கட்டை போல உடயும் தன்மை கொண்டது.
கம்பி வலயும் தன்மை(Ductile) கொண்டது. ஒரு கம்பியை இரண்டாக உடைக்க குறைந்தது 10-15 முறை வளைத்து நிமிர்த்த வேண்டும்.
இதை டக்டில் தன்மை என்று கூறப்படுகிறது.
ஒரு ரூப் தன் வலுவை இழந்து failure ஆகும் பட்சத்தில் முதலில் கம்பி failure ஆக வேண்டும். அப்போதுதான் வீட்டினுள் இருப்பவர்கள் தப்பித்து வெளியேற கால அவகாசம் கிடைக்கும். ஏனெனில் கம்பி உடனே உடையாது. வளைந்து கொண்டே வந்து ஒரு கட்டத்தில்தான் உடையும்.
நீங்கள் கம்பியை வலுவாக போடு போடு என்று போட்டு கட்டும்போது ஆவது என்னவென்றால் ஓவர் reinforcement.(Over Reinforcement) அதாவது தேவைக்கு அதிகமாக.
ஓவர் reinforcement ஆகும்போது, ஒரு பூமி அதிர்ச்சி அல்லது ரூப் வலுவிழப்பு ஏற்பட்டால் கம்பி வலுவாக நிற்கும் ஆனால் கான்கிரீட் fail ஆகிவிடும். Concrete fail ஆகி விழும்போது, உள்ளே இருக்கும் மனிதர்கள் தப்பிக்க கால அவகாசம் இருக்காது. ஏனெனில் கான்கிரீட் பிரிடில் தன்மை கொண்டது. பிஸ்கட்டை போல உடையும்.
இதனால் தான் எப்பொழுதும் கம்பி(ஸ்டீல் failure) முதலில் failure ஆக வேண்டும் ரூப் வலுவிழக்கும் பொழுது.
இதனால் ரூப் rcc எப்பொழுதும் under reinforced or balanced section ஆக டிசைன் செய்ய வேண்டும். இது உங்களுக்கு லாபம் மட்டும் அல்ல. இதுவே பாதுகாப்பும் கூட. இதற்கு கண்டிப்பாக ஒரு ஸ்ட்ருச் சுறல் அணுகி முறையான structural வரைபடம் பெற்று அல்லது அவரின் மேற்பார்வையில் கம்பி கட்டுதல் மிகவும் அவசியம்.