Para Lights - Jaffna

Para Lights - Jaffna Para Lights is more of a service organisation than a business. Operating at nominal profits, Para Lights aims to save electricity by going green.
(655)

It all began in 2012. The Cost of Living was skyrocketing and making ends meet was a challenge. In an effort to cut unnecessary expenses, a former Head of the English Department of a school, almost two centuries old, bought some LED bulbs (Model: Higreen).The electricity bill halved and teachers from the said school, upon hearing this ‘testimony’ began to place orders. Soon, friends, neighbours an

d relatives of the teachers began to ask for Higreen LED bulbs. This gave birth to what is now known as ‘Para Lights.’
Para Lights is more of a service organisation than a business. Operating at nominal profits, Para Lights aims to save electricity by going green and save the cost of running a home by providing quality goods at the cheapest price possible. Today, there are hundreds of products in the product portfolio of Para Lights. These products, along with the Double Engergy Saving Higreen LED Bulbs, Higreen LED Tubelights, Energy Saving Fans and Solar Lighting systems marketed by Para Lights have eased the burden of living and have brought many a smile on many a face. Hope it brings a beautiful smile on your face as well...
Because, at Para Lights, we don’t do business, we serve...

17/08/2026
🙏 எமக்கு மிகவும் பெருமையான தருணம்! ❤️இலங்கையின் அனைத்து வங்கிகளையும் வழிநடத்தும் இலங்கை மத்திய வங்கியின் (Central Bank o...
14/08/2026

🙏 எமக்கு மிகவும் பெருமையான தருணம்! ❤️

இலங்கையின் அனைத்து வங்கிகளையும் வழிநடத்தும் இலங்கை மத்திய வங்கியின் (Central Bank of Sri Lanka) அதிகாரப்பூர்வ Facebook பக்கத்தில் Para Lights – Jaffna இடம்பெற்றிருப்பது எமக்கு அளவற்ற பெருமையைத் தருகிறது!

வடக்கிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட சில வர்த்தகர்களில் Para Lights-ம் ஒன்றாக இடம்பெற்றதுடன், QR Code-ஐ பெற்றுக்கொள்ளும் Para Lights குழுவினரின் புகைப்படமே மத்திய வங்கியின் Facebook பக்கத்தில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

எமது புகைப்படம்... இலங்கையின் வங்கித்துறையை வழிநடத்தும் மத்திய வங்கியின் பக்கத்தில்! ❤️
இதைவிட ஒரு சிறிய Jaffna வணிகத்திற்கு இன்னும் என்ன பெருமை வேண்டும்? 🇱🇰

இந்த பெருமையான தருணத்திற்கு வழிவகுத்த எல்லாம் வல்ல இறைவனுக்கு முதலில் நன்றி! 🙏
எம்மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்து ஆதரவு தரும் எமது அன்பான வாடிக்கையாளர்கள், 105,000+ Facebook நண்பர்கள், ரசிகர்கள், நல்வாழ்த்துகள் தெரிவிப்போர் மற்றும் Para Lights-ஐ தொடர்ந்து ஊக்குவிக்கும் ஒவ்வொருவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள். ❤️

உங்கள் நம்பிக்கையே எமது பலம்.
உங்கள் ஆதரவே எமது பயணம்.
இறைவனின் அருளால்... இன்னும் பல உயரங்களை நோக்கி! 🙏✨

Para Lights - Jaffna in Central Bank of Sri Lanka FB Page

ஜூலை 26-ஆம் தேதி நடைபெற்ற எனது பிறந்தநாளில் ஒரு விளக்கை ஏற்றினேன்…பிறந்தநாள் கேக்கை வெட்டிய பின்னர் பலர் மெழுகுவர்த்திகள...
12/08/2026

ஜூலை 26-ஆம் தேதி நடைபெற்ற எனது பிறந்தநாளில் ஒரு விளக்கை ஏற்றினேன்…

பிறந்தநாள் கேக்கை வெட்டிய பின்னர் பலர் மெழுகுவர்த்திகளை ஊதி அணைக்கிறார்கள். ஆனால், “எனது பிறந்தநாளில் இன்னும் கொஞ்சம் வெளிச்சத்தை ஏற்ற விரும்புகிறேன்” என்று சொல்லி, ஒரு சூரிய சக்தி விளக்கை ஏற்றினேன்.

அந்தக் கணத்தில் என் மனதில் பல எண்ணங்கள் ஓடின.

வெளிச்சம் என்பது வெறும் வெளிச்சம் அல்ல. இருளை அகற்றும் அறிவாக இருக்கலாம்; வழிகாட்டும் நம்பிக்கையாக இருக்கலாம்; ஒருவருடைய வாழ்க்கையில் இன்னொருவர் ஏற்றும் நன்மையாக இருக்கலாம். சிலருக்கு அது இறைவனின் அருளாகவும் இருக்கலாம்.

அந்த விளக்கை ஏற்றியபோது, எனது வாழ்க்கையின் ஒரு முக்கியமான பகுதியான Para Lights-உம் என் நினைவுக்கு வந்தது. பிறந்தநாளன்று கூட நான் விளக்குகளுக்கு நடுவில்தான் இருக்கிறேன் என்பதை நினைத்து எனக்குள் ஒரு சிறிய புன்னகை வந்தது.

ஆனால் அந்தத் தருணம் அதைவிட ஆழமான ஒன்றையும் எனக்கு நினைவூட்டியது. வாழ்க்கையில் எவ்வளவு இருள் இருந்தாலும், அதை வெறுமனே சுட்டிக்காட்டிக்கொண்டிருப்பதைவிட, எம்மால் முடிந்த ஒரு சிறிய வெளிச்சத்தையாவது ஏற்றுவது முக்கியம்.

நாம் ஏற்றும் ஒவ்வொரு விளக்கும் எமக்காக மட்டுமல்ல. அது அருகில் இருப்பவருக்கும் கொஞ்சம் வெளிச்சத்தைத் தருகிறது.

இருளைப் பற்றி குறை கூறுவதற்குப் பதிலாக, நம்மால் முடிந்தால் ஒரு விளக்கையாவது ஏற்றுவோம். 🕯️💛

ஜூலை 26-ஆம் தேதி நடைபெற்ற எனது பிறந்தநாள்  நிகழ்வில் எடுக்கப்பட்ட சில அன்பான நினைவுப் படங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிற...
12/08/2026

ஜூலை 26-ஆம் தேதி நடைபெற்ற எனது பிறந்தநாள் நிகழ்வில் எடுக்கப்பட்ட சில அன்பான நினைவுப் படங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். ❤️

Para Lights-இன் வாடிக்கையாளர்கள் எனக்கு வெறும் வாடிக்கையாளர்கள் அல்ல. பல ஆண்டுகளாக எம்முடன் பயணித்து, எமது மகிழ்ச்சிகளிலும் கவலைகளிலும் பங்குகொள்ளும் ஒரு குடும்பமாகவே உங்களை நான் பார்க்கிறேன்.

இந்தப் படங்களில் இருக்கும் எமது வாடிக்கையாளர் பிரதிநிதிகளுக்கு எனது விசேட நன்றி. அவர்கள் நிகழ்வில் உரையாற்றியதுடன், விளையாட்டுகளிலும் கலந்துகொண்டு, மிகவும் அன்பானதும் அர்த்தமுள்ளதுமான ஒரு நினைவுப் பரிசையும் வழங்கினர்.

அவர்கள் வழங்கிய புகைப்படச் சட்டகத்தில் எனது குடும்பப் புகைப்படத்துடன் Tabitha-வின் புகைப்படத்தையும் சேர்த்து, “உங்கள் சிறுமியை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது” என்று கூறிய அந்த வார்த்தைகள் என் மனதை மிகவும் தொட்டன. ❤️

Para Lights-உடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் இணைந்து பயணிக்கும் இன்னும் சில அன்பானவர்களும் இந்தப் படங்களில் உள்ளனர்.

எனது வாழ்க்கையின் சில தனிப்பட்ட தருணங்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு இதுவே காரணம் — நீங்கள் என் வாடிக்கையாளர்கள் மட்டுமல்ல; என் பயணத்தின் ஒரு பகுதியாகிவிட்டவர்கள். ❤️

நாம் மாறாவிட்டால்…நான் இன்று எழுதப்போகும் விடயம் சிலருக்கு கடுமையாகத் தோன்றலாம். ஆனால் இதைச் சொல்லாமல் இருக்க என்னால் மு...
12/08/2026

நாம் மாறாவிட்டால்…

நான் இன்று எழுதப்போகும் விடயம் சிலருக்கு கடுமையாகத் தோன்றலாம். ஆனால் இதைச் சொல்லாமல் இருக்க என்னால் முடியவில்லை. எமது சமூகத்தின் மீது ஏதோ ஒரு பேரழிவு வரப்போகிறது என்ற உணர்வு எனக்கு இருக்கிறது. அதை நான் ஆழமாக உணர்கிறேன். அது எப்போது, எப்படி வரும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் விரைவில், பெரிதளவில் ஏதோ நடக்கப் போகிறது என்ற ஓர் உணர்வு என்னை வேதனைப்படுத்தியபடியே உள்ளது.

சமீபத்திய சில நிகழ்வுகளைப் பாருங்கள். பொது நிகழ்ச்சிகள் குழப்பத்தில் முடிவது, பொருட்கள் சேதப்படுத்தப்படுவது, உணவுத் திருவிழாக்களில் ஏற்படும் அநாகரிகமான சண்டைகள், சமூக ஊடகங்களில் ஒரு கருத்துக்காக ஒருவர் மற்றவரை இழிவுபடுத்துவது, குடும்பத்தினரையே இழுத்து வந்து கேவலமாகப் பேசுவது—இவை தனித்தனி சம்பவங்கள் அல்ல. எமது சமூகத்தின் உள்ளே வளர்ந்து வரும் ஒரு மனநிலையின் அறிகுறிகள். நாம் இப்படியே தொடர்ந்தால், இயற்கையின் கோபத்திலிருந்து தப்ப முடியாது என்று நான் அஞ்சுகிறேன்.

இன்று Facebook-ஐத் திறந்தால் போதும். கருத்து வேறுபாடு என்றால் உடனே வாய்மொழித் துன்புறுத்தல். கோபம் என்றால் குடும்பத்தை இழுத்து வருதல். எதிர்ப்பு என்றால் ஆபாசமான வார்த்தைகள். அவற்றை எமது குழந்தைகளும் படிக்கிறார்கள் என்பதைப் பற்றிய கவலையே பலருக்கு இல்லை. குழந்தைகளிடம் மரியாதையைப் போதிக்கிறோம்; ஆனால் அவர்களுக்கு முன்னால் மரியாதையற்றவர்களாக நடக்கிறோம். இதுதான் பாசாங்குத்தனம்.

இன்றைய சமூகத்தில் உள்ள மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று பாசாங்குத்தனம்.

தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் நாம் தவறு செய்திருக்கிறோம் என்பதை ஒப்புக்கொள்ள மறுப்பதே மிகப்பெரிய பிரச்சினை. எமக்குப் பிடித்த மனிதன் செய்தால் சரி; பிடிக்காதவன் செய்தால் தவறு. எமக்கு நன்மை கிடைத்தால் எது நடந்தாலும் சரி; எமக்கு எதிராக வந்தால் நடந்தவை அனைத்தும் தவறு. எமக்கென்று ஒரு அளவுகோல்; மற்றவர்களுக்கென்று இன்னொரு அளவுகோல்.

நாங்கள் எங்களையும், எமது பிள்ளைகளாகிய நாளைய தலைமுறையையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம்.

ஒருவர் கல்வியில் பின்தங்கியிருக்கலாம். அதில் அவமானம் இல்லை. ஆனால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாததுதான் பிரச்சினை. ஒருவர் தவறு செய்திருக்கலாம். அதுவும் மனித இயல்பு. ஆனால் சுட்டிக்காட்டப்பட்டதும் தவறை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, சுட்டிக்காட்டியவரையே தாக்குவது தான் பிரச்சினை.

தன்னைத் தானே நேர்மையாகப் பார்க்கும் துணிவு, நான் உட்பட எம்மவர்களிடம் குறைந்து வருகிறது. எமது சமூகத்தின் சீரழிவுக்கு இதுவே முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.

எம்முடன் நாம் நேர்மையாக இருக்க வேண்டும்.

91 மதிப்பெண் எடுத்த குழந்தையிடம், "அருமை!" என்று சொல்லாமல், இன்னொரு குழந்தை 92 எடுத்திருக்கிறது என்று ஒப்பிட்டு அதனை வருத்தப்படச் செய்கிறோம். இதன் மூலம் இரண்டாவது இடம் தோல்வி என்றும், மற்றொருவருடைய வெற்றி எமது தோல்வி என்றும் கற்றுக்கொடுக்கிறோம். பின்னர் சமூகத்தில் ஏன் பொறாமை அதிகமாகிறது என்று ஆச்சரியப்படுகிறோம். இது கூட ஒரு வகையான பாசாங்குத்தனமே.

நில அபகரிப்பு, அலுவலக நேரத்தை முறையாகப் பயன்படுத்தாதது, கைபேசியில் மூழ்கிக் கிடப்பது, குழந்தைகளை கவனிக்காமல் இருப்பது, கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் இருப்பது, வங்கிகளையும் தனிநபர்களையும் ஏமாற்றுவது, போதைப்பொருள், சிறிய அளவிலான மோசடிகளை "பரவாயில்லை" என்று கடந்து செல்வது—இவை அனைத்தும் ஒரே நாளில் ஒரு சமூகத்தை அழிக்காது. ஆனால் இவை சேர்ந்து அந்த சமூகத்தின் மனசாட்சியை மெதுவாகக் கொன்று விடும்.

அதே நேரத்தில், எம்மிடம் நம்பிக்கை தரும் மனிதர்களும் இருக்கிறார்கள். எனது சொந்த அனுபவத்தில், சில வாடிக்கையாளர்கள் தவறுதலாக அதிகமாகக் கிடைத்த பணத்தையே திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள். அது எனக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும், இன்னும் நம்பிக்கை வைக்கலாம் என்ற உணர்வையும் தருகிறது. நேர்மையானவர்கள் இன்னும் இருக்கிறார்கள். அதிகமானவர்கள் அல்ல. ஆனால் இருக்கிறார்கள்!

நானும் இந்த சமூகத்தின் ஒரு பகுதிதான். எனவே, மற்றவர்களை மட்டும் குற்றம் சாட்டி நான் இந்தப் பதிவை எழுதவில்லை. நானும் சரியானவன் அல்ல. நானும் தவறுகள் செய்கிறேன். நானும் சில நேரங்களில் பிறரைப் விளங்கிக்கொள்ளாமல் நடந்திருக்கிறேன். நானும் இந்த சமூகத்தின் குறைகளுக்கு ஒரு சிறிய காரணமாக இருக்கிறேன். அதனால்தான் இந்த எச்சரிக்கை முதலில் எனக்கே.

நான் என்னை மாற்ற முயற்சி செய்கிறேன். இன்னும் நிறைய மாற்ற வேண்டியுள்ளது. நான் பரிபூரணமானவன் அல்ல; எம்மில் எவரும் பரிபூரணமானவர்கள் அல்ல. ஆனால் எமது தவறுகளை ஒப்புக்கொண்டு, அவற்றிலிருந்து மாற முயற்சி செய்ய வேண்டும். தவறு செய்வது தவறல்ல; தவறை ஏற்றுக்கொள்ள மறுப்பதே மிகப் பெரிய தவறு.

ஒரு காலத்தில் ஒருவர் இல்லாமல் இன்னொருவர் வாழ முடியாத காலம் இருந்தது. அயல்வீட்டுக் குழந்தையை எமது குழந்தையாகப் பார்த்தோம். ஒருவருடைய துன்பம் மற்றவருடைய துன்பமாக இருந்தது. இன்று எமது வீட்டு வாசலைத் தாண்டி மற்றவரைப் பற்றிச் சிந்திக்கவே பல நேரங்களில் நாம் விரும்புவதில்லை.

நாம் மீண்டும் மனிதர்களாக ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டும்.

இன்னொருவரின் வெற்றியை எமது தோல்வியாகப் பார்க்காமல், அது எமது சமூகத்தின் வெற்றியாகப் பார்க்க வேண்டும். இன்னொருவர் உயரும்போது எமக்கும் பெருமையாக இருக்க வேண்டும். அவரை கீழே இழுத்து எம்மை உயர்த்த முயற்சிப்பதை நிறுத்த வேண்டும்.

அரசியல்வாதிகளை மட்டும் குறை சொல்லியும் பயனில்லை. அவர்கள் முன்வைக்கும் ஒவ்வொரு கருத்திலும் நாங்கள் பிரிகிறோம். சமூக ஊடகங்களில் அரசியல்வாதிகளைப் பற்றிய பதிவுகளைப் பாருங்கள்—கருத்து வேறுபாடு எவ்வளவு விரைவாக வெறுப்பாக மாறுகிறது என்பதைப் விளங்கிக்கொள்ளலாம். அரசியலும் எமது சமூகத்தின் கண்ணாடிதான். அந்தக் கண்ணாடியில் தெரியும் முகம் எம்முடையதே.

இப்போது நான் மிகவும் பயப்படுவது இதற்காகத்தான்.

ஒரு சமூகமாக நாம் எம்மைத் திருத்திக்கொள்ள மறுத்தால், ஏதாவது ஒன்று எம்மைத் திருத்தும். அது இயற்கையாக இருக்கலாம். பொருளாதாரமாக இருக்கலாம். சமூகமாக இருக்கலாம். நாம் இப்போது கற்பனை செய்ய முடியாத வேறு வடிவமாக இருக்கலாம்.

அப்போது நல்லவர்களும் பாதிக்கப்படலாம். நேர்மையானவர்களும் விலையைச் செலுத்த வேண்டியிருக்கலாம். ஏனென்றால் இயற்கை ஒரு போதும் யார் தவறு செய்தார்கள், யார் செய்யவில்லை என்று பிரித்து பார்க்காது. அனைவருக்கும் ஒரே தீர்ப்பே!

அதனால்தான் நான் பயப்படுகிறேன். நானும் வரப்போகின்ற அந்தத் தீர்ப்பிற்கு ஒரு காரணமானவன். நீங்களும் நானும் சேர்ந்து உருவாக்கிய சமூகமே இது. எனவே நானும் மாற வேண்டும். நீங்களும் மாற வேண்டும். நாமெல்லோரும் மாற வேண்டும்.

நேரம் அவ்வளவாக இல்லை!

எமது தவறுகளை ஒப்புக்கொள்வோம். எமது பாசாங்குத்தனத்தை விட்டுவிடுவோம். குழந்தைகளிடம் எதிர்பார்க்கும் நல்ல குணங்களை முதலில் நாமே கடைப்பிடிப்போம். பிறருடைய வெற்றியைப் பார்த்து மகிழக் கற்றுக்கொள்வோம். கோபப்பட்டாலும் மனிதத்தன்மையை இழக்காமல் இருப்போம்.

பேரழிவு வந்து எம்மை மண்டியிடச் செய்து மாற்றுவதற்கு முன்னர், நாமே எம்மை மாற்றிக்கொள்வோம்.

நான் சொல்வது தவறாக இருக்க வேண்டும் என்று உண்மையாகவே விரும்புகிறேன்.

ஆனால் அந்தப் பேரழிவு வரப்போகிறது என்ற அச்சம்…

எனக்குள் அதிகரித்தவண்ணமே இருக்கிறது...

🌿 “எண்ணி நன்றி சொல்வோம்” – 62 நாள் இயக்கம் 🌿62 நாட்களில் இன்று 42-வது நாள்!அன்பான பரா மெய்நிகர் கிராம மக்களே, ❤️ஜூலை 1 அ...
11/08/2026

🌿 “எண்ணி நன்றி சொல்வோம்” – 62 நாள் இயக்கம் 🌿

62 நாட்களில் இன்று 42-வது நாள்!

அன்பான பரா மெய்நிகர் கிராம மக்களே, ❤️

ஜூலை 1 அன்று ஆரம்பித்த எமது “எண்ணி நன்றி சொல்வோம்” 62 நாள் பயணத்தில், இன்று நாம் 42-வது நாளை எட்டியுள்ளோம்.

ஒவ்வொரு நாளும் நாம் பெற்றிருக்கும் ஆசீர்வாதங்களை நினைவூட்டும் ஒரு சிறிய பதிவை வெளியிட்டு, அதை உங்கள் Facebook Profile-ல் PUBLIC ஆகப் பகிர வேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் நோக்கம்.

ஆனால் இன்று ஒரு விஷயம் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியையும், அதே நேரத்தில் சிறிது வருத்தத்தையும் தருகிறது.

🏆 62 நாட்களில் இதுவரை ஒரு நாளைக்கூட தவறவிடாமல் தொடர்ந்து பகிர்ந்து வரும் 5 பேர் மட்டுமே உள்ளனர்!

👏 இந்த 5 பேருக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகள்! ❤️

🌟 Sivan Ponnu
🌟 சுமதி அற்புதராஜா
🌟 Dharshini Christy
🌟 Kájàn Arul
🌟 Priya Baskaran

உங்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு உண்மையிலேயே பாராட்டுக்குரியது. 👏❤️

😔 ஆனால், நான்கு பேர் ஒரே ஒரு நாளைத் தவறவிட்டிருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.

62 நாட்களையும் முழுமையாக நிறைவு செய்து, எமது Para Lights T-Shirt-ஐ பெறுவோம் என்ற உறுதியுடன் ஆரம்பித்தவர்கள், ஒரு நாளைத் தவறவிட்டதால் அந்த வாய்ப்பை இழக்க நேரிடுவது உண்மையிலேயே கவலைக்குரியது.

ஆனால் இன்னும் பயணம் முடியவில்லை! ❤️

📅 ஆகஸ்ட் 31 வரை நாட்கள் இருக்கின்றன.

எமது நோக்கம் வெறும் ஒரு T-Shirt பெறுவது அல்ல.

🙏 ஆசீர்வாதங்களை எண்ணுவது
❤️ இறைவனுக்கு நன்றி சொல்வது
🌻 நம்பிக்கையை இழக்காமல் இருப்பது
🤝 ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவது
😊 மகிழ்ச்சியைப் பரப்புவது

இதுதான் எமது உண்மையான வெற்றி.

ஒரு நாளைத் தவறவிட்டவர்கள் மனம் தளர வேண்டாம்.
முடிந்தவரை தொடர்ந்து செய்யுங்கள். இன்னொருவரின் நாளில் ஒரு சிறிய மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு பதிவாக உங்கள் முயற்சி அமையலாம்.

🌎 உலகம் கவலைகளைப் பேசட்டும்...
பரா மெய்நிகர் கிராமம் ஆசீர்வாதங்களைப் பேசட்டும்! ❤️

இணைந்தே எம்மிடம் இருப்பவற்றை எண்ணி நன்றி சொல்வோம் — பிறரிடம் இருப்பவற்றையும் அவர்களுக்கு நினைவூட்டி மகிழ்விப்போம். 🙏🌿

Para Lights – Jaffna

ORIGINAL POST: https://www.facebook.com/photo?fbid=1037909282143975&set=a.204872358781009

❤️ பரா லைட்ஸின் பதிவுகளைத் தவறாமல் பார்க்க — FAVOURITE செய்வது எப்படி?1️⃣ Facebook-ல் Para Lights – Jaffna பக்கத்திற்குச...
10/08/2026

❤️ பரா லைட்ஸின் பதிவுகளைத் தவறாமல் பார்க்க — FAVOURITE செய்வது எப்படி?

1️⃣ Facebook-ல் Para Lights – Jaffna பக்கத்திற்குச் செல்லுங்கள்.

2️⃣ பக்கத்தின் Follow பொத்தானைத் தட்டுங்கள்.

3️⃣ அங்கு வரும் Favourites என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யுங்கள்.

இதைச் செய்தால், Para Lights-ன் புதிய பதிவுகளை உங்கள் Feed-ல் காணும் வாய்ப்பு அதிகரிக்கும்.

🙏 எங்களை Follow செய்வது மட்டும் போதாது.
FAVOURITE செய்துவிட்டு எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்!

Bluetooth Party Speaker with Two Mics - 15751/= (புதிய விலை) 3 மாத உத்தரவாதத்துடன் - 18251/=6 மாத உத்தரவாதத்துடன் - 2075...
10/08/2026

Bluetooth Party Speaker with Two Mics - 15751/= (புதிய விலை)
3 மாத உத்தரவாதத்துடன் - 18251/=
6 மாத உத்தரவாதத்துடன் - 20751/=
தேர்வு உங்களுடையது (ஆனால், எந்த பொருளாயினும், உத்தரவாதத்துடன் எடுப்பது அனைவருக்கும் நல்லது)

வந்து முடிந்து வந்து முடிந்து ஐந்தாம் தடவையாக மீண்டும் வந்துள்ளது!!

பாடசாலைக்கு ஒன்றை கொள்வனவு செய்த ஆசிரியர், மறு நாள் வந்து இன்னொன்றையும் கொள்வனவு செய்து சென்றார்!

100cm உயரமுள்ள மைக் உடன் மாஸ் பார்ட்டி ஸ்பீக்கர்! சும்மா அதிருதல??

https://www.facebook.com/reel/3376475872526813

விழாக்களுக்கும் விறுவிறுப்பிற்கும்....

Bluetooth மூலம் பாடல்களை கேட்கலாம் – வயர் இல்லாத மைக்கில் பேசலாம் அல்லது பாடலாம்!

Bluetooth, USB, TF Card, FM, Aux – எல்லாமே ஒரே Box-ல!
FM Radio - பரா லைட்ஸின் அமைவிடத்தில் 17 ஸ்டேஷன்கள் பிடிபடுகின்றன!

Battery Backup: Up to 3–4 hours (Rechargeable) (பேட்டரிக்கு உத்தரவாதம் இல்லை)

Lighting: Multi-color RGB LED lights – Party vibes on!
Recharge Method: Micro USB charging cable
வீடு, கடை, விழாக்கள், மத நிறுவனங்கள், காம்பிங் போன்ற இடங்களில் / நேரங்களில் பயன்படும்

32.6cm x 32.6cm x 94.9cm
Weight: 6.86kg
2400Mah / 3x7w

Para Lights - Jaffna
115 Chemmani Road
Near Kittu Poonga

Akko Star 44w Rechargeable Tubelight with Six Months Warranty - 4201/= (புதிய விலை) மின்சாரம் போகும் நேரத்தில் வீட்டில் ...
09/08/2026

Akko Star 44w Rechargeable Tubelight with Six Months Warranty - 4201/= (புதிய விலை)

மின்சாரம் போகும் நேரத்தில் வீட்டில் அமைதியாக வேலை செய்ய ஒரு நம்பகமான emergency light.

இந்த Akko Star 44W Dual LED Emergency Light
உயர் பிரகாசத்துடன் நீண்ட நேரம் வெளிச்சம் தரக்கூடியது.

44W LED power
96 LED lights – நல்ல பிரகாசம்
Rotary switch – வெளிச்சத்தை குறைக்க / அதிகரிக்க முடியும்
Rechargeable battery (சுமார் 3200–3600mAh capacity)
USB port – கூடுதல் பயன்பாடு
Portable design – எடுத்து செல்ல எளிது
முழு charge செய்தால் நீண்ட நேரம் வெளிச்சம் தரும்.
வீடு, கடை, garage, camping அல்லது power cut நேரங்களில் உதவும்.

அவசர நேரத்தில் தேவைப்படும் ஒரு பயனுள்ள light.

Para Lights – Jaffna
115, Chemmani Road
Nallur

Address

115 Chemmani Road Nallur
Jaffna
40000

Telephone

+94789130813

Website

Alerts

Be the first to know and let us send you an email when Para Lights - Jaffna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Para Lights - Jaffna:

Shortcuts

Share